மகாலட்சுமியை வீட்டுக்கு வரவழைக்க செய்ய வேண்டிய 3 மாற்றங்கள்..! செல்வம் பெருகும்

பணப் பிரச்சனையால் மனம் வெதும்பி இருப்பவர்கள் வீட்டில் மூன்று மாற்றங்களை மட்டும் செய்தால் மகாலட்சுமி வீடு தேடி வருவார்கள். இதன் மூலம் உங்கள் வீட்டில் செல்வமும் பெருகும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 14, 2023, 08:44 PM IST
மகாலட்சுமியை  வீட்டுக்கு வரவழைக்க செய்ய வேண்டிய 3 மாற்றங்கள்..! செல்வம் பெருகும் title=

இந்திய கலாச்சாரத்தில் வாஸ்து முறை இருக்கிறது. வீடு உள்ளிட்ட எந்த கட்டடங்களாக இருந்தாலும் அல்லது வீட்டின் உள்ளே வைக்கப்படும் பொருளாக இருந்தாலும் வாஸ்துமுறைப்படி மட்டுமே வைக்கப்படும். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் இதனை பின்பற்றுகிறார்கள். அந்த நம்பிக்கை இருப்பவர்கள் வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் திசை மற்றும் அதன் வடிவமைப்பில் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, வீடு கட்டும் போது வாஸ்து விதிகளைப் புறக்கணித்தால், எதிர்மறை ஆற்றல் வீட்டில் தங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அத்தகைய சூழ்நிலையை நீங்கள் எதிர்கொண்டிருந்தால் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்கி, நேர்மறை ஆற்றலைப் புகுத்துவதற்கு வீட்டில் சில மாற்றங்களைச் செய்யலாம்.

வீட்டில் பூஜை அறை

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் வழிபாட்டிற்கு மிகவும் பொருத்தமான திசை வடகிழக்கு (கிழக்கு-வடக்கு மூலை) ஆகும். வீட்டின் கோவில் எப்போதும் கிழக்கு, வடக்கு அல்லது கிழக்கு-வடக்கு கோணத்தில் இருக்க வேண்டும். மேலும் கோவில் சற்று உயரத்தில் இருக்க வேண்டும். இத்தகைய முறையில் நீங்கள் உங்கள் வீட்டு வழிபாட்டு அறையை அமைக்கவில்லை என்றால் மாற்றி அமைப்பது சிறந்தது. 

மேலும் படிக்க | ராகுவின் நட்சத்திரத்திற்கு மாறும் சனி: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம்

கடிகாரம்

வீட்டில் கடிகாரம் சரியான இடத்தில் நிறுவப்படவில்லை என்றால், வாழ்க்கையில் பல நிதி சிக்கல்கள் எழுவதற்கு வாய்ப்புள்ளதாம். வாஸ்து படி வீட்டில் கடிகாரத்தை மேற்கு அல்லது தெற்கு திசையில் வைக்க கூடாது. அதே நேரத்தில், கடிகாரத்தை கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைக்கலாம். கடிகாரத்தை தப்பான திசையில் நீங்கள் வைத்திருந்தால் உடனே வாஸ்துபடி மாற்றி வையுங்கள். 

துளசி

துளசிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. வீட்டின் முற்றத்தில் துளசி செடியை நட வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இது தவிர வீட்டின் கிழக்கு அல்லது கிழக்கு-வடக்கு திசையில் துளசி செடியை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இவ்வாறு துளசி செடியை நடுவதன் மூலம் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். வீட்டில் மகிழ்ச்சி நீங்காமல் பெருகும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி 2023: இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அழிவை உருவாக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News