டோக்கியோ ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வெல்வேன் தமிழக வீரர் மாரியப்பன்

Paralympics: டோக்கியோ ஒலிம்பிக் மீண்டும் தங்கம் வெல்வேன் என பிரதமர் மோடியிடம் உரையாடும் போது தமிழக வீரர் மாரியப்பன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2021, 06:46 PM IST
டோக்கியோ ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வெல்வேன் தமிழக வீரர் மாரியப்பன் title=

Paralympics: ஆகஸ்ட் 24 அன்று டோக்கியோவில் நடைபெற உள்ள "பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வெல்வேன் என தமிழக வீரர் மாரியப்பன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் (Paralympics Games) நடைபெற இருக்கின்றன.

இந்தியா முழுவதிலிருந்து  இந்த ஒலிம்பிக் போட்டிகளில் சார்பாக 54 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள வீரர்களுடன் "பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடினர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனும் கலந்து கொண்டு பிரதமர் மோடியுடன் பேசினார். அப்போது மாரியப்பனின் தாயார் சரோஜா ,தம்பிகள் குமார், கோபி உள்ளிட்டோரும் பிரதமருடன் பேசினர்.

தமிழக வீரர் மாரியப்பன்  (Mariyappan Thangavelu) 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் அப்போது தங்கப் பதக்கம் வென்றார். 

ALSO READ | மாரியப்பன் தங்கவேலுவை பார்த்து வியந்த சேவாக்!

இது குறித்து பிரதமர் மோடியிடம் மாரியப்பன் பேசுகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு கடின உழைப்பு மற்றும் பயிற்சி இவை தவிர பயிற்சியாளர்களின் முழு ஒத்துழைப்பு காரணமாக அப்போது தங்கப் பதக்கம் வென்றேன்.

இந்த முறை இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் மிகச் சிறப்பாக எனக்கு ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார்கள். இதன் காரணமாக டோக்கியோவில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் பதக்கம் வென்று சாதனை படைப்பேன் என நம்பிக்கையுடனும், உறுதியுடனும் பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.

இதனைக்கேட்ட பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) மாரியப்பன் நீங்கள் நாட்டிற்கு நல்லப் பெயர் எடுத்து தர வேண்டும் என்று அவரை வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து மாரியப்பனின் தாயாரிடம் பிரதமர் மோடி பேசினார்.

ரியோ பாராலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, தீபா மாலிக், விகாஸ் கவுடா, சேகர் நாயக், ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு பத்மஸ்ரீ விருது பெற்றார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News