2-வது டி20 போட்டி: இந்தியா அணி அபார வெற்றி!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கிடையேயான டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

Last Updated : Jan 30, 2017, 08:35 AM IST

Trending Photos

2-வது டி20 போட்டி: இந்தியா அணி அபார வெற்றி!! title=

நாக்பூர்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கிடையேயான டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி-20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன் எடுத்து 5 ரன்னில் தோல்வியடைந்தது.

இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 71(47) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மணிஷ் பாண்டே 30(26), கேப்டன் கோலி 21(15) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். நெக்ரா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளதால் 1- 1 என்ற  கணக்கில் தொடர் சமநிலை ஆகி உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த டி-20 போட்டி பெங்களூரில் வருகின்ற 1-ந்தேதி நடைபெறவுள்ளது.

Trending News