இலங்கையில் முத்தொடர் டி-20 போட்டி- இந்தியா பங்கேற்பு

இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் டி-20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

Last Updated : Feb 21, 2018, 06:18 PM IST
இலங்கையில் முத்தொடர் டி-20 போட்டி- இந்தியா பங்கேற்பு title=

இலங்கையின் 70_வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தொடர் டி-20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் மார்ச் 6-ந் தேதி முதல் இலங்கையில் தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

முத்தொடர் டி-20 கிரிக்கெட் போட்டி  மார்ச் 6-ம் தேதி முதல் மார்ச் 18-ம் தேதி வரை இலங்கையில் நடக்க இருக்கிறது. இதில் ஒவ்வொரு அணியுடன் மற்ற அணியுடன் தலா 2 முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் பைனலுக்கு செல்லும். 

போட்டி அட்டவணை விவரம்:

மார்ச். 6: இந்தியா - இலங்கை
மார்ச். 8: இந்தியா - வங்காளதேசம்
மார்ச்.10: இலங்கை - வங்காளதேசம்
மார்ச்.12: இந்தியா - இலங்கை 
மார்ச்.14: இந்தியா - வங்காளதேசம்
மார்ச்.16: இலங்கை - வங்காளதேசம் 
மார்ச்.18: இறுதிப்போட்டி.

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 

 

Trending News