துப்பாக்கி லைசென்ஸ் கோரி கிரிக்கெட் வீரர் மனைவி விண்ணப்பம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்‌ஷி துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

Last Updated : Jun 20, 2018, 04:10 PM IST
துப்பாக்கி லைசென்ஸ் கோரி கிரிக்கெட் வீரர் மனைவி விண்ணப்பம்! title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்‌ஷி துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

புகழ் உச்சியில் இருப்பவர்  மகேந்திர சிங் தோனி. கடந்த 2010-ம் ஆண்டு தன் பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் வாங்கினார். 

இந்நிலையில் தற்போது அவரது மனைவி சாக்‌ஷி, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக எண்ணி, துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். பிஸ்டல் அல்லது .32 ரிவால்வர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு லைசென்ஸ் தரும்படி கேட்டுள்ளார்.

டோனி கிரிக்கெட் விளையாட சென்றுவிடுவதால், தான் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் தனியாக இருப்பதாகவும், மேலும் தனிப்பட்ட வேலைக்காரணமாக வெளியில் தனியாக செல்ல இருப்பதாலும், உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் துப்பாக்கி வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று சாக்‌ஷி விண்ணப்பத்தில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

Trending News