சாஹல்-ஐ கொலை செய்யப்பார்த்த மும்பை அணியின் வீரர் யார்?

ஐபிஎல் 2022: அஷ்வின் மற்றும் கருண் நாயரிடம் பேசிய யுஸ்வேந்திர சாஹல், 2013ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய போது நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவம் பற்றி பேசினார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 8, 2022, 02:24 PM IST
  • யுஸ்வேந்திர சாஹல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
  • கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடினார்.
  • 8 ஆண்டுகளில் சாஹல் RCBக்காக 139 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சாஹல்-ஐ கொலை செய்யப்பார்த்த மும்பை அணியின் வீரர் யார்? title=

யுஸ்வேந்திர சாஹல் இந்தியன் பிரீமியர் லீக் 2022-ல் தனது புதிய அணியான ராஜஸ்தானில் சிறப்பாக விளையாடி வருகிறார்.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இதுவரை நடந்த போட்டிகளில் முக்கிய கட்டங்களில் நேர்த்தியாக பந்து வீசி, விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தற்போது, ​​ஐபிஎல் 2022-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று போட்டிகளில் ஏழு விக்கெட்டுகளை எடுத்துள்ளார், மேலும் சாஹல் தனது சிறப்பான ஆட்டத்தை தொடருவார் என்று நம்புகிறார்.  மைதானத்திற்கு வெளியேவும் சாஹல் மிகவும் சுட்டித்தனமான, அனைவராலும் விரும்ப பட கூடிய வீரராகவும் இருந்து வருகிறார்.  அவருடைய எளிதாக அணுகுமுறைக்கு அனைரையும் ரசிக்க வைக்கிறது.  இருப்பினும், 2013-ல் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடியபோது, ​​ஒரு வீரர் குடிபோதையில் இருந்தபோது சாஹல் ஒரு விரும்பத்தகாத சம்பவத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

sports

மேலும் படிக்க | IPL2022: பும்ரா மற்றும் நிதீஷ் ராணாவுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ

ராஜஸ்தான் ராயல்ஸ் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், கருண் நாயர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருடன் சாஹல் "கம்பாக் ஸ்டோரிஸ் " என்ற தலைப்பில் பேசினார்.  அதில் சாஹல் ஒரு சம்பவத்தைப் பற்றித் பேசி, இது பலருக்குத் தெரியாது என்றும் கூறினார்.  2013 ஆம் ஆண்டில் குடிபோதையில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஒருவர், தன்னை பால்கனியில் தொங்கவிட்டார் எனவும், ​​அதிஷ்டவசமாக நான் உயிர் தப்பினேன் என்றும், அவரின் பெயரை கூற விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.   

"என் கதை, சிலருக்குத் தெரியும், நான் இதைப் பற்றி பேசவில்லை, இதை நான் பகிரவில்லை. 2013-ல், நான் மும்பை இந்தியன்ஸுடன் இருந்தேன், பெங்களூரில் ஒரு போட்டி இருந்தது. அதன் பிறகு ஒரு கெட் டுகெதர் இருந்தது, ஒரு வீரர் இருந்தார், மிகவும் குடிபோதையில் இருந்த அவரது பெயரை நான் கூற மாட்டேன், அவர் மிகவும் குடிபோதையில் இருந்தார், அவர் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார், அவர் என்னை அழைத்தார், அவர் என்னை வெளியே அழைத்துச் சென்றார், அவர் என்னை பால்கனியில் இருந்து தொங்கவிட்டார. என் கைகள் அவனைச் சூழ்ந்தன. நான் பிடியை இழந்திருந்தேன், நான் 15 வது மாடியில் இருந்தேன். திடீரென்று அங்கு இருந்த பலர் வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனக்கு ஒருவித மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் எனக்கு தண்ணீர் கொடுத்தார்கள், நான் ஒரு குறுகிய காலத்தில் தப்பித்துவிட்டேன் என்று நான் உணர்ந்த ஒரு சம்பவம் இது. சிறிய தவறு நடந்திருந்தால், நான் கீழே விழுந்திருப்பேன், " என்று சாஹல் வீடியோவில் அஸ்வின் மற்றும் நாயரிடம் கூறினார்.

 

சாஹல் 2013-ல் மும்பை இந்தியன்ஸின் ஒரு பகுதியாக இருந்தார், அதன் பிறகு அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் (ஆர்சிபி) சேர்ந்தார். சாஹல் ஐபிஎல்லில் தனது அறிமுக சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரே ஒரு ஆட்டத்தில் விளையாடி எந்த விக்கெட்டையும் எடுக்க முடியவில்லை.  31 வயதான சாஹல் எட்டு ஆண்டுகள் RCB-ன் ஒரு பகுதியாக இருந்தார், 8 ஆண்டுகளில் சாஹல் RCBக்காக 139 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாஹலின் தற்போதைய உரிமையாளரான ராஜஸ்தான் ராயல்ஸ் தற்போதைய சீசனில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | மும்பை அணி ஹாட்ரிக் தோல்வி: மோசமான ஆட்டத்துக்கு என்ன காரணம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News