ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சுமார் 6 லட்சம் பேர் விண்ணப்பம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6,04,156 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.

Last Updated : May 13, 2019, 08:27 AM IST
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சுமார் 6 லட்சம் பேர் விண்ணப்பம்! title=

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6,04,156 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நடக்கவிருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. இரண்டு தாள் அடங்கிய இந்த தேர்வுக்கு மொத்தமாக 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தாளுக்கு 1,83,341 பேரும், இரண்டாம் தாள் எழுத 4,20,815 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

Trending News