இயக்குநர் ஷங்கர்-க்கு ரூ.10000 அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்!

எந்திரன் திரைப்படம் குறித்த வழக்கில் ஆஜராகாத இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 3, 2018, 07:09 PM IST
இயக்குநர் ஷங்கர்-க்கு ரூ.10000 அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்! title=

எந்திரன் திரைப்படம் குறித்த வழக்கில் ஆஜராகாத இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

இயக்குயர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன். இப்படத்தின் கதை தன்னுடையது என உரிமை கோரி ஆருர் தமிழ்நாடன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடுத்திருந்தார்.

தன்னுடைய அனுமதி இல்லாமல் எந்திரன் படம் எடுத்ததால், காப்புரிமைச் சட்டத்தின் கீழ் தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க இயக்குனர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும் என இந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நீதிபதி M சுந்தர் முன்பு நடைப்பெற்றது. அப்போது சாட்சி விசாரணைக்கு இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராகவில்லை. மேலும், படப்பிடிப்பு வேலை காரணமாக இயக்குநர் ஷங்கர் வெளியூர் சென்றிருப்பதால், வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென்று அவர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவினை ஏற்க மறுத்த நீதிபதி, சாட்சி விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் மீண்டும் மீண்டும் கால அவகாசம் கோருவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டார். மேலும், இயக்குனர் ஷங்கருக்கு 10000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.  இந்த அபராத தொகையை புளூ கிராஸ் அமைப்பிடம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 12-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்!

Trending News