நாட்டின் வளர்ச்சி என்பது தனிமனிதனின் வளர்ச்சி: முதல்வர்

Last Updated : Aug 15, 2017, 10:01 AM IST
நாட்டின் வளர்ச்சி என்பது தனிமனிதனின் வளர்ச்சி: முதல்வர் title=

சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். சென்னையில் இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். முன்னதாக ராஜாஜி சாலையில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டார். 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல்வர் எடப்பாடியார் பார்வையிட்ட அணிவகுப்பில் ஆந்திரா காவல்துறையினர் முதல் முறையாக பங்கேற்றனர்.

கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் உரையாற்றினார். அதில்,

சுதந்திரத்திற்காக பல சுதந்தர வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள். போராட்டத்தில் உயர் தியாகம் செய்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். 

நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்கள் நினைவிடங்களில் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட வீரர்கள், குடும்பத்திற்கும் ஓய்வூதியம், மருத்துவ வசதி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை ஆகியவை செயல்படுத்துகிறது. 

இந்திய நாட்டில் பாதுகாப்புக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாட்டின் வளர்ச்சி என்பது தனிமனிதனின் வளர்ச்சியை அளவுகோளாக கொண்டது.

ஜெயலலிதா முதல்வரான பின் தமிழகம் முன்னேறியது. பொருளாதாரம், உணவு, கல்வி குடியிருப்பு தொழில், சுகாதாரம் பாதுகாப்பு தங்கு தடையின்றி கிடைப்பதில்தான் சுதந்திரத்தின் வெற்றி உள்ளது. இதில் தமிழகம் முன்னேறி, இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக உள்ளது.

ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்ற உழைத்து வருகிறோம்எதிரில் வரும் தடைகளை தகர்த்து மக்களுக்காக சேவையாற்றுகிறோம். பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தொழில்துறையில் பல மாற்றங்கள் செய்து முதலீட்டாளர்கள் எளிதாக முதலீடு செய்ய வழி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில்துறை பூங்காக்கள் உருவாக்க முயற்சி செய்யப்படுகிறது. தடையில்லா மின்சாரம் உள்ளிட்டவற்றால் தமிழகம் தொழில்துறையில் முன்னேறி வருகிறது.தமிழகம் 1,26,19 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளது. 

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.12,000 ரூ.13,000-மாக அதிகரிக்கப்படும்.தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் அதிகரிக்கப்படும். 1,519 ஏரிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. 

இவ்வாறு அவர் பேசினார். 

Trending News