சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கிய மதுரை உயர் நீதிமன்றக் கிளை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 15, 2022, 07:21 PM IST
  • சவுக்கு சங்கருக்கு ஆறு மாத சிறைவாசம்
  • ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என Youtube சேனலில் தெரிவித்த வழக்கில் தீர்ப்பானது
  • நீதித்துறையை அவமதிப்பது தவறு: நீதிபதிகள் காட்டம்
சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கிய மதுரை உயர் நீதிமன்றக் கிளை title=

மதுரை: ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என Youtube சேனலில் தெரிவித்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வந்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் கடந்த ஜூலை 22ஆம் தேதி ''ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது'' என யூ டியூப் சேனலான ரெட்பிக்ஸில் தெரிவித்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கின் தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். முன்னதாக நீதிபதிகள் வழக்கை தீர்ப்பிற்காக ஒத்திவைத்த நிலையில், சவுக்கு சங்கரும் நீதிமன்றத்திலேயே இருந்தார்.

மேலும் படிக்க | சவுக்கு சங்கர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செப்டம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு 

பின்னர் தீர்ப்பு குறித்த விசாரணை வந்தபோது நீதிபதிகள், சவுக்கு சங்கரை 6 மாதம் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். மேலும், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு காரணமான பதிவுகளை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தொழில்நுட்பத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக முகநூல், கூகுள், ட்விட்டர் சமூக வலைதளங்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என Youtube சேனலில் தெரிவித்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கின் தீர்ப்புக்கு, சவுக்கு சங்கர் மேல் முறையீடு செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | சவுக்கு சங்கருக்கு தடை! ஜி ஸ்கொயர் குறித்து பேசக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு

மேலும் படிக்க | சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்று பாராட்டும் அதிமுகவின் ஜெயக்குமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News