’பைக்ரேஸ்’ வாலிபருக்கு வார்டு பாயாக பணியாற்ற உத்தரவு

பைக் ரேஸில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ஸ்டான்லி மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 31, 2022, 06:36 PM IST
  • சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் கைது
  • ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்
  • அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்ற உத்தரவு
’பைக்ரேஸ்’ வாலிபருக்கு வார்டு பாயாக பணியாற்ற உத்தரவு title=

சென்னை கொருக்குப்பேட்டை கார்நேசன் நகரை சேர்ந்த 21 வயதான பிரவீன். மார்ச் 20ம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துமனை ரவுண்டானாவில் இருந்து மூலகொத்தளத்திற்கு பைக் ரேஸ் சென்றுள்ளார்.  இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சார்லஸ் அளித்த புகாரில் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பிரவீன் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில்  ஜாமீன்கோரி  பிரவீன் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

மேலும் படிக்க | வன்னியர் உள் இட ஒதுக்கீட்டின் வரலாறு...

அப்போது மனுதாரர் தரப்பில்,  அஜித்குமார் என்பவரின் பைக்கில் பின்னால் அமர்ந்து பயணித்ததாகவும், எந்த குற்றமும் செய்யவில்லை என்றும்  வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில், பைக் ரேசில் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் இருந்ததாலேயே கைது நடவடிக்கை எடுத்ததாகவும், பொதுசாலையில் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன், சாலையில் செல்லும் மூத்த குடிமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள், இரும்பு கம்பிகளை சாலையில் தேய்த்து தீப்பொறி ஏற்படுத்தி மிரட்டும் தொணியில் செயல்படுவதாகவும் வேதனை தெரிவித்தார்.

மேலும் படிக்க | வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: தமிழக அரசின் முடிவு என்ன?- அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

இதனையடுத்து பைக்ரேஸில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞர் பிரவீனுக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், மனுராரர் பிரவீன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வார்டில் ஒரு மாத காலம் வார்டு பாய்களுக்கு உதவியாக  பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அதுகுறித்து மருத்துவமனை டீனுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்ததார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News