சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்

Last Updated : Oct 16, 2017, 07:37 PM IST
சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் title=

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று கலைவாணர்  அரங்கத்தில் நடைபெற்ற ‪தமிழ்நாடு சீருடைப் பணியாளர்தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 15,621 சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 45 சீருடைப் பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். 

காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்வின்பொது மாண்புமிகு ஒ. பன்னிர்செல்வம், அமைச்சர் திரு. திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ செங்கோட்டையன், பி.தங்கமணி , எஸ்.பி வேலுமணி மற்றும் கிரிஜா வைத்தியநாதன் என்று  உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தினர்கள்.

Trending News