முழு அடைப்பு போராட்டம் ஜெ.,வுக்கு சித்தராமையா கடிதம்

Last Updated : Sep 15, 2016, 05:51 PM IST
முழு அடைப்பு போராட்டம் ஜெ.,வுக்கு சித்தராமையா கடிதம் title=

காவிரியில் விவகாரத்தில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, நாளை தமிழகம் முழுதும் முழு கடையடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. இவ்வேலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டது:- கர்நாடகாவில் வசிக்கும் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் 12-ம் தேதி கலவரம் வெடித்தது. சில மணி நேரங்களில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காவிரி விவகாரத்தில் வன்முறைகள், முழு அடைப்பு பலன் தராது. நாளைய முழு அடைப்பு போராட்டத்தில் கன்னடர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். முழு அடைப்பு போராட்டத்தின் போது வன்முறை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

வன்முறை ஏற்பட்டால் இரு மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். காவிரி விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என இங்குள்ள மீடியாக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல் நீங்களும் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending News