விஷவாயு தாக்கி தொழிலாளி பலி.., போலீஸார் விசாரணை..!

சென்னை அருகே குப்பை தரம்பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தொழிலாளி ஒருவர் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - Dayana Rosilin | Last Updated : May 5, 2022, 02:27 PM IST
  • விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி
  • போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
  • நிவாரண உதவி வழங்க கோரிக்கை
விஷவாயு தாக்கி தொழிலாளி பலி.., போலீஸார் விசாரணை..! title=

சென்னை அடுத்த கொளத்தூர் கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திருவெங்கடம். குப்பை தரம்பிரிக்கும் தொழிலாளியான இவர், வழக்கம்போல் நேற்று மாதவரம் பிரகாஷ் நகரில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டுள்ளார்.குப்பைகளை தரம் பிரித்துக்கொண்டு இருந்த அவர், அங்கேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதை பார்த்து ஆதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், உடனடியாக அவசர ஊர்திக்கு தொடர்பு கொண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவர்கள் செயற்கை ஸ்வாசம் பொருத்தி சிகிச்சை அளித்துள்ளனர்.

மருத்துவர்கள் முடிந்தவரை போராடியும் திருவெங்கடம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் திருவெங்கடத்தின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | பாரம்பரிய பழக்கம்னா, ‘ஏ.சி’ ஏன் பயன்படுத்துறீங்க ?’ - மடாதிபதிகளுக்கு பழ.நெடுமாறன் கேள்வி

இதற்கிடையே திருவெங்கடத்துடன் பணியாற்றிய சக ஊழியர்கள், அவர் குப்பையில் இருந்து வெளியேறிய விஷ வாயு தாக்கிதான் உயிரிழந்துள்ளார் என உறுதிபட தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் முதல் குப்பை தரம்பிரிக்கும் தொழிலாளர்கள் வரை குறைந்த குலிக்கு வேலை செய்யும் இவர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது என வருத்தம் தெரிவிக்கும் தொழிலாளர்கள், அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அது மட்டும் இன்றி தங்களின் உயிருக்கு எவ்வித உத்திரவாதமும் இல்லாத நிலையில் உயிரிழந்த திருவெங்கடத்தின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News