BSNL வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; தினம் 5GB டேட்டா இலவசம்...

இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் பல தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு உதவும் வகையில் BSNL இலவச பிராட்பேண்ட் திட்டத்தை அறிவித்துள்ளது.

Last Updated : Mar 20, 2020, 07:42 PM IST
BSNL வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; தினம் 5GB டேட்டா இலவசம்... title=

இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் பல தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு உதவும் வகையில் BSNL இலவச பிராட்பேண்ட் திட்டத்தை அறிவித்துள்ளது.

ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது சமூக தொடர்புகளைத் தக்க வைத்துக் கொள்ள உதவும் என்றாலும், வீட்டிலிருந்து வேலை செய்யும் மக்களின் உற்பத்தித்திறனைத் தடுக்க பல காரணிகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று இணைய இணைப்பு. இந்த பிரதான பிரச்சனையினை போக்கும் விதமாக BSNL Work@home என்னும் புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. 

10mbps வேகத்தில் இணைய சேவை அளிக்கும் இந்த திட்டத்தினை நிறுவனம் இலவசமாக வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

BSNL-ன் புதிய திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார் பிராந்தியம் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளாகவும் இருக்கும். இருப்பினும், லேண்ட்லைன் இணைப்பு கொண்ட BSNL பயனர்கள் மட்டுமே இந்த திட்டத்தை இலவசமாகப் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், பயனர்களுக்கு 5GB தினசரி தரவினை 10mbps இணைய வேகத்தில் பெறுவர். மேலும் தரவு தீர்ந்தவுடன் வேகம் ஒரு நாளைக்கு 1mbps என்ற வேகத்தில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற ஆபத்தான சூழ்நிலையிலிருந்து அதிகமான மக்களை வேலை செய்ய ஊக்குவிப்பதற்காக BSNL-ன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து அதிகமானோர் வேலை செய்ய உறுதியளித்தால், அது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உதவும் என கூறப்படும் நிலையில் BSNL-ன் நன்கு சிந்திக்கக்கூடிய திட்டம் நிறைய பேருக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய உதவும் என தெரிகிறது.

இந்த திட்டத்தின் மூலம், தற்போதுள்ள லேண்ட்லைன் பயனர்களை பிராட்பேண்ட் பயனர்களாக மாற்றவும், இலவச தரவு நன்மைகளைப் பெறவும் BSNL வழிவகுக்கிறது. மேலும் பயனர்கள் தங்கள் லேண்ட்லைன் திட்டத்தின் படி ஏற்கனவே வைத்திருக்கும் இலவச அழைப்பு நன்மைகளுக்கு இது இடையூறாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. பயனர் பிராட்பேண்ட் சந்தாதாரராக மாறியதும், அவர் குழுசேர்ந்த லேண்ட்லைன் திட்டத்திற்கு அவர் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், ஆனால் தரவு சலுகைகள் இலவசமாக வழங்கப்படும்.

சில இணைய சேவை வழங்குநர்களான ACT பைபர்நெட் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளன. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் புதிய சந்தாதாரர்களுக்கான நிறுவல் மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகையை தள்ளுபடி செய்துள்ளது, அதே நேரத்தில் ACT ஃபைபர்நெட் இணையம் 300mbps வேகத்தில் தரவை தரவுள்ளது மற்றும் மார்ச் 31 வரை வரம்பற்ற தரவை வழங்குகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் மேலும் அதிகமான மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News