Published: May 12, 2020, 11:20 AM|Updated: May 12, 2020, 11:20 AM
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், மார்ச், 25 முதல் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. தற்போது, வெளிமாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கான ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. வரும், 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், 'இன்று முதல், 15 குறிப்பிட்ட ரயில்கள் இயக்கப்படும்; ரயில் போக்குவரத்து படிப்படியாக துவக்கப்படும்' என, ரயில்வே அறிவித்துள்ளது.