பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு

Last Updated : Apr 29, 2017, 12:02 PM IST
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு title=

பிலிப்பைன்ஸ் நாட்டில் சரான்கானி மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் இன்று 6.8 ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மிண்டானோ பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. 

நிலநடுக்கம் குறித்து ஒருவர் கூறுகையில்:- ''நிலநடுக்கத்தை எங்களால் நன்றாக உணர முடிந்தது. சுமார் 10 நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டது'' என்றார். பசிபிக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் அமைந்து இருப்பதால், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கமாக உள்ளது.

Trending News