காரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு

விவசாய செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், 14 காரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

Last Updated : Jun 2, 2020, 12:09 PM IST
    • மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் விவசாயிகளின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு
    • பயிர்களின் செலவில் 50 முதல் 83 சதவீதம் வரை லாபம் சேர்க்கப்பட்டுள்ளது.
    • 14 பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன
காரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு title=

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இவற்றில், விவசாயிகளின் நலன்கள் தொடர்பான முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டத்திற்குப் பிறகு, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் விவசாயிகளின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு தகவல் வழங்கினார்.

நரேந்திர சிங் தோமர், விவசாயிகளின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூறுகையில், காரீஃப் பருவத்தின் 14 பயிர்களுக்கு (காரீஃப் பருவம் 2020-21) குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையில், பயிர்களின் செலவில் 50 முதல் 83 சதவீதம் வரை லாபம் சேர்க்கப்பட்டுள்ளது.

வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 14 பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை

காரீஃப் சீசன் 2020-21க்கான நெல்லின் ஆதரவு விலை 1868 குவிண்டால் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில், நெல் விலையில் 50 சதவீத லாபம் சேர்க்கப்பட்டு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜோவர் ஹைப்ரிட்டின் குறைந்தபட்ச ஆதரவு விலை 2620 (செலவில் 50% லாபம்) ரூ / குவிண்டால் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் கம்பின் விலை ரூ.2150 (83% லாபம்), மக்காச்சோளத்தின் விலை ரூ.1850 ஆகவும், பட்டாணியின் விலை ரூ.7196 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ராகியின் விலையில் 50 சதவீதம், மக்காச்சோளத்தில் 53 சதவீதம், பட்டாணியில் 58 சதவீதம், பாசியில் 50 சதவீதம், யூராட், நிலக்கடலை, சூரியகாந்தி, சோயாபீன், எள், ராம்டில் மற்றும் பருத்தியில் 50 சதவீதம் லாபம் சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க கொள்முதல் அதிகரிப்பு

லாக்டவுன் நிலையிலும், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து தளர்வு அளித்து வருவதாக வேளாண் அமைச்சர் தெரிவித்தார். கோதுமை கொள்முதல் நாடு முழுவதும் சீராக நடந்து வருகிறது. இதுவரை நாட்டில் 360 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 342 லட்சம் மெட்ரிக் டன்-ஆக இருந்தது. நெல் 95 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது 90 லட்சம் மெட்ரிக் டன்-ஆக இருந்தது.

பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் கொள்முதல் 16.07 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 15 லட்சம் மெட்ரிக் டன்-ஆக இருந்தது.

கடன் நிவாரணம்

விவசாய மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளின் 3 லட்சம் ரூபாய் வரையிலான இடைக்கால கடன்களின் கால அவகாசம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில் வட்டி தள்ளுபடியின் பலன்களும் கிடைக்கும்.

பயிர் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 31 இருந்தது, ஆனால் லாக்டவுனால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, அதன் காலக்கெடு மே 31 வரை நீட்டிக்கப்பட்டது, ஆனால் நிலைமை இன்னும் மேம்படாத காரணத்தினால் இதன் காலக்கெடு மே 31இல் இருந்து ஆகஸ்ட் 31ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை, விவசாயிகளுக்கு குறுகிய கால விவசாய கடன்களில் இரண்டு சதவீத வட்டியும், கடன் திருப்பிச் செலுத்துவதில் 3 சதவீதமும் கிடைக்கும். இந்திய அரசு விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

 கடந்த ஆண்டு, இதற்காக மத்திய அரசு 28,000 கோடி ரூபாயை மானியமாக வழங்கியது.

வட்டியில் தள்ளுபடி

வங்கிகளின் வட்டி 9 சதவீதம். இந்த வட்டிக்கு இந்திய அரசு 2% தள்ளுபடி அளிக்கிறது, விவசாயி சரியான நேரத்தில் கடனை திருப்பி செலுத்தினால், அவருக்கு 3% மானியம் தனியாக வழங்கப்படுகிறது. மொத்தத்தில், விவசாயிகளுக்கு 4 சதவீதம் மட்டுமே என்ற விகிதத்தில் 3 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும்.

(மொழியாக்கம்: தமிழ்ச் செல்வன்)

Trending News