இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிய அடி, நாளை முதல் புதிய விதி

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, வட்டி விகிதத்தை உயர்த்தும் வங்கிகளில் இப்போது மற்றொரு வங்கியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 9, 2022, 03:46 PM IST
  • புதிய கட்டணங்கள் ஜூலை 10ம் தேதி முதல் அமல்
  • எம்சிஎல்ஆர் 6.95-7.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது
இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிய அடி, நாளை முதல் புதிய விதி title=

பொதுத்துறையைச் சேர்ந்த மற்றொரு வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்து, பல்வேறு காலகட்டங்களுக்கான கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) செய்த இந்த மாற்றம் ஜூலை 10 முதல் அமலுக்கு வரும். வங்கி பல்வேறு தவணைக்கால கடன்களுக்கான நிதி அடிப்படையிலான வட்டி விகிதத்தை (எம்சிஎல்ஆர்) 0.10 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதிய கட்டணங்கள் ஜூலை 10ம் தேதி முதல் அமல்
பங்குச்சந்தைக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அளித்துள்ள தகவலின் படி, ஜூலை 10, 2022 முதல் எம்சிஎல்ஆர் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வங்கியின் புதிய விகிதங்கள் நாளை அதாவது ஜூலை 10 முதல் அமலுக்கு வருகிறது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, எம்சிஎல்ஆர் அடிப்படையிலான வட்டி விகிதம் 6.95 சதவீதத்தில் இருந்து 7.55 சதவீதமாக இருக்கும். அதிகநபடி ஒரு வருடத்திற்கு எம்சிஎல்ஆர் 7.55 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இது 7.45 சதவீதமாக இருந்தது.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் பற்றிய முக்கிய அப்டேட், ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு 

எம்சிஎல்ஆர் 6.95-7.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது
வாகனக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் ஆகியவை எம்சிஎல்ஆருடன் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகள் கடனுக்கான எம்சிஎல்ஆர் 0.10 சதவீதம் முதல் 7.55 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒரு நாள் முதல் ஆறு மாதங்கள் வரை எம்சிஎல்ஆர் ஐ 0.10 சதவீதம் அதிகரித்து 6.95-7.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் ஜூலை 10 முதல் வட்டி விகிதத்தை உயர்த்துகிறது
வட்டி விகிதத்தை அதாவது ரெப்போ லிங்க்ட் லெண்டிங் ரேட் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. வங்கியின் இணையதளத்தின்படி, இந்த விகிதம் ஜூலை 10 முதல் 7.75 சதவீதமாக அதிகரிக்கும். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, பல வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு முன், கனரா வங்கி நிதி அடிப்படையிலான வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தவிர பேங்க் ஆப் பரோடா 0.1 முதல் 0.2 சதவீதம் வரையிலும், எச்டிஎப்சி வங்கி 0.35 சதவீதம் வரையிலும் அதிகரித்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 90 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதையடுத்து, வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம், எச்பிஏ விகிதங்களை குறைத்தது அரசு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News