CBSE-யின் நீட் தேர்வு மையம் தமிழகத்தில் தான்: உயர்நீதிமன்றம்!!

தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கிய சிபிஎஸ்இயின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது!  

Last Updated : Apr 27, 2018, 03:27 PM IST
 CBSE-யின் நீட் தேர்வு மையம் தமிழகத்தில் தான்: உயர்நீதிமன்றம்!! title=

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முதலாக கடந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த தேர்வை வருகிற மே மாதம் 6-ம் தேதி மத்திய கல்வி வாரியம் CBSE நடத்த உள்ளது.

இதற்கான தேர்வு மையம் ஒதுக்கீட்டில், தமிழக மாணவர்களுக்கு வேறு மாநிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

எனவே இதனை எதிர்த்து சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மைலவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கக்கோரி மனு அளித்திருந்தார். 

இது குறித்த வழக்கு விசாரணை முடிந்தவுடன், இன்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை வெளியிட்டது 
 
அதில், தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்விற்கான மையங்களை ஒதுக்கிட உத்தரவிட்டது. 

மேலும், தேர்வு மையங்களை ஒதுக்கும் பணியை சிபிஎஸ்இ நிர்வாகம் உடனடியாக செய்திட வேண்டும் என்று தெரிவித்தனர்.

Trending News