வகுப்பறையில் மாணவிகளுடன் பாலியல் உறவு - ஆசிரியர் தலைமறைவு!

4-ஆம் வகுப்பு மாணவிகளை வகுப்பறையில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆசிரியரை காவல்துறை தேடி வருகிறது!

Last Updated : Apr 22, 2018, 12:48 PM IST
வகுப்பறையில் மாணவிகளுடன் பாலியல் உறவு - ஆசிரியர் தலைமறைவு! title=

கொல்கத்தா: 4-ஆம் வகுப்பு மாணவிகளை வகுப்பறையில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆசிரியரை காவல்துறை தேடி வருகிறது!

கொல்க்கதாவின் ராய்காஞ்ச் பகுதியில் இருக்கம் பள்ளி ஒன்றில், 4 வகுப்பு பயிலும் மாணவிகள் இருவரை அவரது ஆசிரியர் மிரட்டி உடல்உறவு வைத்துள்ளார். பள்ளி நேரம் முடிந்தப் பின்னர் வகுப்பறையில் வைத்து இந்த கொடூரத்தினை செய்துள்ளார்.

கடந்த வாரத்தில் மட்டும் 4 நாட்கள் இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தன் பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து குழந்தையின் பெற்றோர்கள் கொடுத்தப் புகாரின் பேரில் ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்குத் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பரிசோதனையில் மருத்துவர் சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.

குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் தற்போது தலைமறைவாக உள்ளதாக ராய்கஞ்ச் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News