ஓணம் விழாவில் இடம் பெரும் அத்தப்பூக்கோலம் - ஒரு பார்வை

Last Updated : Sep 4, 2017, 02:47 PM IST
ஓணம் விழாவில் இடம் பெரும் அத்தப்பூக்கோலம் - ஒரு பார்வை title=

கேரள மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. அந்த விழாவில் அத்தப்பூக்கோலம் போடப்படும். அதனை பற்றி தெரிந்துக்கொள்ளவோம்.

பெண்கள் கோலம் போடும்போது பாடல் பாடிக் கொண்டே கோலம் இடுவார்கள்.10-ம் நாளில் பெரிய கோலம் போட்டு இறைவனை வழிப்படுவார்கள்.  

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும்

கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும். அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர்கள்.

ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவைப் பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். 

அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்றெனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வார்கள். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ , சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர். இவை இறைவனை வழிப்பட மிக சிறந்த பூக்கள் ஆகும். 

Trending News