அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதியில் போட்டியிட 81 பேர் விருப்பம்...

டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020-ல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தொகுதி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளின் கண்களும் இந்த தொகுதியில் தான் தற்போது உள்ளன. 

Last Updated : Jan 25, 2020, 12:16 PM IST
அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதியில் போட்டியிட 81 பேர் விருப்பம்... title=

டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020-ல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தொகுதி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளின் கண்களும் இந்த தொகுதியில் தான் தற்போது உள்ளன. 

கெஜ்ரிவாலின் புது டெல்லி தொகுதியில் மொத்தம் 81 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர் என்பது தான் இதற்கான பிரதான காரணம்.

தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை ஆராய்ந்த பின்னர், 34 வேட்பு மனுக்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த வேட்பாளர்களில் பெரும்பாலோர் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர். 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புது டெல்லி சட்டமன்றத் தொகுதியின் இறுதிப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியானது. புதுடெல்லி சட்டமன்றத் தொகுதிக்கு மொத்தம் 81 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைய வலைத்தளம் தெரிவித்துள்ளது. வேட்பு மனுக்களை ஆராய்ந்த பின்னர், 34 வேட்பு மனுக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சவால் விடுப்பவர்களில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி போன்ற தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களும், ஒரு டஜனுக்கும் அதிகமான கட்சிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது, அதற்கு முன்னர் ஒரு புதிய சபை அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தற்போது டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. டெல்லி சட்டபேரவைக்கான தேர்தல் ஒரு கட்டமாக நடைபெறும். வாக்குப்பதிவு பிப்ரவரி 8-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி ஜனவரி 6, 2020 நிலவரப்படி டெல்லியின் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர்கள் 1,46,92,136-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,689 இடங்களில் அமைக்கப்படும் 13,750 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

முன்னதாக, 2015 டெல்லி சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 70 இடங்களில் 67 இடங்களை வென்று டெல்லியில் ஆட்சி பிடித்தது. முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 2015-ல் பாரிய வெற்றியைப் பதிவு செய்த பின்னர் தற்போது மீண்டும் தேர்தலை எதிர்கொள்கிறது.

டெல்லியின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை சட்டசபை தேர்தலுக்கான தேதிகளை அறிவிப்பதற்கு முன்பே வீடு வீடாகச் சென்று தங்கள் பிரச்சாரங்களை துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News