ராஜஸ்தானில் தொடரும் உள்கட்சி பூசல்; என்ன செய்வார் ராகுல்...

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி கண்ட நிலையில், மாநில தலைமை மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில காங்கிரஸார் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

Last Updated : May 28, 2019, 08:37 AM IST
ராஜஸ்தானில் தொடரும் உள்கட்சி பூசல்; என்ன செய்வார் ராகுல்... title=

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி கண்ட நிலையில், மாநில தலைமை மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில காங்கிரஸார் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 
மொத்தமுள்ள 25 தொகுதிகளில் காங்கிரஸ் ஒடு இடத்தில் கூட வெற்றி பெறாதது அங்குள்ள மாநில அமைச்சர்கள், அரசுக்கு எதிரான மன நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இரு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் முனைப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்ட சபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 121 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக கூட்டணிக்கு 76 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

இந்நிலையில் தற்போது மக்களவை தேர்தலில் பாஜக பெற்றிருக்கும் வாக்கு சதவீதத்தை சட்டமன்ற தொகுதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளில் 185 தொகுதிகளை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக காங்கிரசின் முக்கிய தலைவராக இருக்கும் சச்சின் பைலட்டின் சொந்த தொகுதியான சவாய் மதோபூரில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் 4 மாதங்களுக்குள்ளாகவே ஏற்பட்டு விட்டதென்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில அமைச்சர்கள் உதய்லால் அஞ்சனா, ரமேஷ் மீனா ஆகியோர் தேர்தல் தோல்வியை காங்கிரஸ் ஆய்வு செய்து, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உண்டான வழியை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மாநில தலைவர்களுக்கு இடையிலாண இத்தகைய முரண்பாடுகள் தேசிய தலைமையினை அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News