நரை முடிக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் இந்த 2 பொருட்கள்

White Hair Problem: பலர் நரை முடி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர், அத்தகைய சூழ்நிலையில் தேங்காய் எண்ணெய் நரை முடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதில் சில ஆயுர்வேத விஷயங்களை கலந்தால் போதும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 30, 2023, 02:55 PM IST
  • மருதாணி ஒரு நேச்சுரல் ஹேர் கலராகும்.
  • முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில டிப்ஸ்.
  • முடியை கருமையாக தேங்காய் எண்ணெய்
நரை முடிக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் இந்த 2 பொருட்கள் title=

நரை முடிக்கு தேங்காய் எண்ணெய்: இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே நரை முடி பிரச்சனை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனால் இளைஞர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர், சில சமயங்களில் அவமானத்தையும் குறைந்த நம்பிக்கையையும் சந்திக்க நேரிடுகிறது. இதற்கு மரபணு காரணங்கள் இருக்கலாம், ஆனால் பொதுவாக குழப்பமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் மாசுபாடு ஆகியவையும் இதற்கான முக்கிய காரணங்களாகலாம். எனவே நீங்கள் கருமையான கூந்தலைப் பெற வேண்டுமென்றால், தேங்காய் எண்ணெயின் உதவியுடன் 3 பொருட்களைக் கலக்க பயன்படுத்தி வந்தால் உடனடி தீர்வை பெறலாம்.

முடியை கருமையாக தேங்காய் எண்ணெய்

1. தேங்காய் எண்ணெய் மற்றும் மருதாணி
தேங்காய் எண்ணெய் முடிக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது மேலும் மருதாணி ஒரு நேச்சுரல் ஹேர் கலராகும். 

மேலும் படிக்க | கோடை வந்து விட்டது... குழந்தைகளுக்கு ‘இந்த’ உணவுகளை கொடுக்காதீங்க!

* முதலில் மருதாணி இலைகளை வெயிலில் காய வைக்கவும். பிறகு 4 முதல் 5 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கொதிக்க வைக்கவும். இப்போது இந்த எண்ணெயில் மருதாணி இலைகளைப் போட்டவும், பின் எண்ணெயில் நிறம் வர ஆரம்பித்ததும், கேஸை அணைக்கவும். பின் முடியில் இதை தடவவும். சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு சுத்தமான தண்ணீரில் முடியைக் கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நரை முடி கருப்பாக்கும்.

2. தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய்
நரை முடியைப் போக்க, தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காயின் கலவையானது சிறந்த தேர்வாகும். நெல்லிக்காயில் பல வகையான சத்துக்கள் மற்றும் ஆயுர்வேத பண்புகள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அதேபோல் நெல்லிக்காய் நம் சருமத்திற்கும் முடிக்கும் நன்மை பயக்கும். கொலாஜனை அதிகரிக்கும் சக்தி இந்தப் பழத்திற்கு உண்டு. அதுமட்டுமில்லை நெல்லிக்காயில் நிறைய இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது, இது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

* 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 2 முதல் 3 ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடாக்கவும். இந்த பேஸ்ட் ஆறியதும் உச்சந்தலையில் தடவவும். இரவு முழுவதும் காத்திருந்து காலையில் சுத்தமான தண்ணீரில் உங்கள் தலையை கழுவவும். அதன் பலன் சில நாட்களில் தெரியும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கைகளில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது, கவனம் தேவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News