குழந்தையின்மை சிகிச்சைக்கு மருத்துவர்கள் சொல்லும் தீர்வு

குழந்தையின்மை என்பது அதிகரித்து வரும் பிரச்சனையாக இருப்பதால் தம்பதிகள் இது குறித்து கவனம் கொள்ள வேண்டும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 17, 2022, 09:10 AM IST
  • குழந்தையின்மைக்கு என்ன செய்வது?
  • தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
  • பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு காணலாம்
குழந்தையின்மை சிகிச்சைக்கு மருத்துவர்கள் சொல்லும் தீர்வு title=

இந்தியா முழுவதும் குழந்தையின்மை பிரச்சனை என்பது அதிகரித்துவிட்டது. இதனால் மூளைமுடுக்கெல்லாம் ஐவிஎப்(IVF) எனப்படும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துவிட்டன. பணத்தை மையமாகக்கொண்டு செயல்படும் மருத்துவமனைகளும் உள்ளன. ஏனென்றால் குழந்தை வேண்டும் என்பதற்காக லட்சங்களை செலவு செய்ய தம்பதிகள் தயாராக இருப்பதால், இதனை மூலதனமாக்கிக் கொள்கின்றன சில மருத்துவமனைகள்.

இதில் பலருக்கும் தீர்வு கிடைத்தாலும், பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தம்பதிகளும் உள்ளனர். இதனால், இந்த சிகிச்சை முன்பு சில தகவல்களை தம்பதிகள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

மேலும் படிக்க | விந்தணுக்கள் அதிகரிக்க ஆண்கள் கட்டாயம் இதை சாப்பிட வேண்டும்

திட்டமிடுங்கள்

இளம் பருவத்தில் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்றால், இயல்பாக கருத்தரிக்க வாய்ப்புகள் உள்ளன. அவற்றிலும் காலம் தாழ்ந்துவிட்டாலோ அல்லது 30-களில் திருமணம் செய்திருப்பவராக இருந்தால், உடனடியாக மருத்துவர்களை அணுகி தம்பதிகள் இருவரும் உடலை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதாவது, விந்தணு பரிசோதனை, கர்பப்பை சோதனைகளை செய்து கொள்வது அவசியம்.

சிகிச்சை முறை

இதில் பிரச்சனைகள் இல்லாதபட்சத்தில் உணவுமுறை உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி,உணவுமுறைகளை கடைபிடிக்கும்பட்சத்தில் குழந்தையின்மை பிரச்சனை இருக்காது. ஒருவேளை மருத்துவ பரிசோதனையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக சிகிச்சை முறைகளை தொடங்க முயற்சிக்க வேண்டும்.

எப்போது சிகிச்சை தேவை?

தாமதமான திருமண பந்தத்தில் இணைந்திருப்பவர்கள் மூன்று மாதங்களிலேயே பரிசோதனைகளை செய்து சிகிச்சை முறைகளுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். சரியாக மகப்பேறு மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம். காலதாமதம் என்பது நீங்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி உங்களை வழிநடத்தி வந்தால் குழந்தையின்மை பிரச்சனைக்கு நீங்கள் விரைவாக தீர்வு காண வேண்டும். 

மேலும் படிக்க | இரவு நேர உணவே ஒருவரின் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரம்

IUI மற்றும் IVF

குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு காணும் மருத்துவமுறைகளில் ஐயுஐ, ஆரம்பக் கட்ட சிகிச்சை முறையாகும். இதில் ஓகே ஆனால், ஐவிஎப் சிகிச்சை உங்களுக்கு தேவைப்படாது. இல்லையென்றால் ஐவிஎப் சிகிச்சைக்கு செல்ல வேண்டியிருக்கும். இங்கு தான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சில மருத்துவமனைகள் ஆரம்பக் கட்டத்திலேயே உங்களை ஐவிஎப் நோக்கி நகர்த்தக் கூடும். இதில் உங்களுக்கு உடன்பாடு என்றால் பிரச்சனை இல்லை. விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News