சிறுநீரகத்தை பாதிக்கும் ‘5’ ஆபத்தான பழக்கங்கள்

சிறுநீரகம் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். நீங்கள் அதில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்றால், உங்கள் உடலும் பெரிய சேதத்தை சந்திக்க நேரிடும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 5, 2022, 10:11 AM IST
  • சிறுநீரக பிரச்சனை
  • சிறுநீரகம் சிறப்பாக செயல்பட உதவும் உணவுகள்
  • சிறுநீரகம் சீராக செயல்பட டிப்ஸ்
சிறுநீரகத்தை பாதிக்கும் ‘5’ ஆபத்தான பழக்கங்கள் title=

சிறுநீரகத்தை சேதம் படுத்தும் கெட்ட பழக்கங்கள்: சிறுநீரகம் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இதன் மூலம், உடலின் கூடுதல் திரவம் மற்றும் அத்தியாவசியமற்றது சிறுநீர் கால்வாயில் இருந்து வெளியேற்றப்படுகிறது. ஏதேனும் ஒரு காரணத்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் கூறுகள் வெளியேற முடியாமல், அவை படிப்படியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, மெதுவாக மரணத்தை நோக்கி மனிதனைத் தள்ளும். அத்தகைய சூழ்நிலையில், சிறுநீரக பராமரிப்பு பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே உங்கள் சிறுநீரகத்தை படிப்படியாக சேதப்படுத்தும் அந்த 5 கெட்ட பழக்கங்களை எவை என்பதை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள்

குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது தீங்கு விளைவிக்கும்
உங்கள் சிறுநீரகம் சரியாக செயல்பட, நாள் முழுவதும் 5-7 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம் ஆகும். நாள் முழுவதும் இதை விட குறைவாக நீங்கள் தண்ணீர் குடித்தால், நீங்கள் நேரடியாக உங்கள் சிறுநீரகத்தை கடுமையான ஆபத்தில் ஆழ்த்துகிறீர்கள் என்று அர்த்தமாகும். உண்மையில், சிறுநீரகம் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் திரவங்களை அகற்றுவதற்கு தண்ணீர் மூலம் செயல்படுகிறது. 

மேலும் படிக்க | பளபளக்கும் ஆரோக்கியமான கூந்தலுக்கு 5 உணவுகள் செய்யும் மாயம்

சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வை தவிர்க்கவும்
இனிப்பான உணவு உண்பதால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் சர்க்கரை அதிகம் உள்ள இனிப்புகளை சாப்பிட்டால், அது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இனிப்புகளை அதிகம் சாப்பிடுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம். எனவே இனிப்பான விஷயங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

தூக்கமின்மையால் உடல் இழப்பு
தினமும் 7-8 மணி நேரம் நன்றாக தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இதனால் உடலின் அனைத்து முக்கிய பாகங்களுக்கும் ஓய்வு கிடைக்கும். இதை விட குறைவாக தூங்கினால், உங்கள் சிறுநீரகம் உட்பட அனைத்து முக்கிய உறுப்புகளும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த ஆரம்பிக்கும். இதன் காரணமாக நீங்கள் நோய்க்கு இரையாகலாம்.

வலி நிவாரணிகளின் அதிகப்படியான பயன்பாடு  
உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது வலி நிவாரணி அல்லது பிற மருந்துகளை உட்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும், நீங்கள் வழக்கமாக மருந்துகளை உட்கொண்டால், அவ்வாறு செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. உண்மையில், மருந்துகளில் வலுவான உப்பு உள்ளது, அதைச் சுத்தம் செய்ய சிறுநீரகம் அதிக ஆற்றலைச் செலுத்த வேண்டும். நீங்கள் அதிக மருந்துகளை எடுத்துக் கொண்டால், உங்கள் சிறுநீரகங்கள் அவற்றின் உப்புகளை அகற்ற முடியாமல் போகலாம். இது உங்கள் உயிரை ஆபத்தில் ஆழ்த்தலாம்.

உணவில் அதிக உப்பு உண்பது 
உணவின் சுவையை அதிகரிக்கவும், கோய்ட்டர் என்ற நோயைத் தவிர்க்கவும் உப்பு சாப்பிடுவது அவசியம். ஆனால் அது குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும். இனிப்புப் பொருட்களைப் போலவே, உப்பு நிறைந்த பொருட்களையும் அதிக அளவில் சாப்பிட்டால், பக்கவிளைவுகள் ஏற்பட அதிக நேரம் எடுக்காது. அவ்வாறு செய்வது உங்கள் சிறுநீரகத்தை நேரடியாக சேதப்படுத்தும். எனவே அதிக உப்பு நிறைந்த பொருட்களிலிருந்து சிறிது தூரம் இருக்க முயற்சி செய்யுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பருவகால நோய்களில் இருந்து பாதுகாக்கும் சுலபமான வழி.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News