நீரிழிவு நோய் இருக்கா? இந்த பச்சை இலைகளை பயன்படுத்துங்க

நீரிழிவு நோய் நம் உடலை உள்ளிருந்து பலவீனப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல்நிலையில் அக்கறை காட்டாவிட்டால், சிறுநீரக நோய் மற்றும் இதய நோய்களையும் சந்திக்க நேரிடும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 5, 2022, 09:00 AM IST
  • இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த டிப்ஸ்
  • நீரிழிவு நோயாளிகளுக்கான இலைகள்
  • நீரிழிவு நோயாளிகளுக்கு இயற்கை வைத்தியம்
நீரிழிவு நோய் இருக்கா? இந்த பச்சை இலைகளை பயன்படுத்துங்க title=

நீரிழிவு நோயாளிகளுக்கான இலைகள்: நீரிழிவு நோய் நம் உடலை உள்ளிருந்து பலவீனப்படுத்துகிறது. நீரழிவு என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும். நீரிழிவு நோயில் பல வகைகள் உள்ளன. 'டைப் 1' நீரிழிவு நோயில், கணையம் இன்சுலின் உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது, எனவே குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் குவிகிறது. டைப் 2 நீரிழிவு நோயில், கணையம் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாது, அல்லது ஹார்மோன் திறம்பட செயல்படாது. பொதுவாக நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல்நிலையில் அக்கறை காட்டாவிட்டால், சிறுநீரக நோய் மற்றும் இதய நோய்களையும் சந்திக்க நேரிடும். இந்த மருத்துவ நிலையில் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது ஒரு சவாலாக விஷயமாகும். நமக்கு இயற்கையான இன்சுலினாக செயல்பட்டு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் சில பச்சை இலைகளைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம், இதன் மூலம் உங்களின் சர்க்கரை அளவை கட்டுபடுத்தலாம்.

அஸ்வகந்தா இலைகள்
அஸ்வகந்தா இலைகளின் உதவியுடன் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம், இதற்காக நீங்கள் இந்த இலைகளை வெயிலில் காய வைத்து பின்னர் அவற்றை அரைத்து தூள் வடிவில் செய்துக் கொள்ளவும். இப்போது அந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், நீரிழிவு நோயாளிகளுக்கு அது நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா... நிபுணர்கள் கூறுவது என்ன..!!

ஆர்கனோ இலைகள்
சர்க்கரை நோயாளிகள் ஆர்கனோ இலைகளை சாப்பிட்டு வந்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். இது கணையத்தில் அதிக இன்சுலினை உருவாக்கும் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் இனிப்புகளுக்கான ஏக்கத்தைத் தடுக்கிறது. இது தவிர, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

கறிவேப்பிலை
தென்னிந்திய உணவுகளில் கறிவேப்பிலை அதிகம் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இந்த பச்சை இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, தினமும் காலையில் கறிவேப்பிலைகளை மென்று சாப்பிட வேண்டும்.

மா இலைகள்
மாம்பழம் நீரிழிவு நோயாளிகளின் எதிரி என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அதில் அதிக இயற்கை சர்க்கரை உள்ளது, ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, மாம்பழத்தின் இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் அவை நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பெக்டின் ஏராளமாக உள்ளன. இதற்கு மா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பின்னர் இந்த நீரை இரவு முழுவதும் விட்டு காலையில் வடிகட்டி குடிக்கவும்.

வெந்தய இலைகள்
வெந்தய இலைகளில் ஆயுர்வேத பண்புகள் நிறைந்துள்ளன, எனவே அவற்றின் நுகர்வு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நீங்கள் அவற்றின் இலைகள் அல்லது விதைகளை சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவும்.

மேலும் படிக்க | இந்த 3 வழிகளை பின்பற்றினால் போதும்! உடல் எடையை எளிதில் குறைக்கலாம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News