ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை, இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 22) பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

Last Updated : Apr 22, 2020, 08:52 AM IST
ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை, இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது  title=

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 22) பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு பயங்கரவாதிகள் இப்பகுதியில் இன்னும் மறைந்திருப்பதாகவும், அவர்களைக் கொல்ல அல்லது கைது செய்வதற்கான நடவடிக்கை நடந்து வருவதாகவும் ஜீ மீடியாவிடம் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜைனபுர கிராமத்தின் மெல்ஹோரா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, 55 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) ஆகியவற்றின் கூட்டு குழு மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் தொடங்கியது.

அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வீரர்களும் பதிலடி கொடுத்தனர். சிறிது நேரம் நடந்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

Trending News