ஹரியானாவில் 2 மணி நேரத்தில் 6 பேர் கொடூரக் கொலை!!

ஹரியானாவில் 2 மணி நேரத்தில் 6 பேரை கொடூரமாக கொலை செய்த ஒரு நபரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.

Last Updated : Jan 2, 2018, 06:56 PM IST
ஹரியானாவில் 2 மணி நேரத்தில் 6 பேர் கொடூரக் கொலை!! title=

ஹரியானா மாநிலத்தில் உள்ள பல்வால் நகரில் இன்று காலை தொடர்ச்சியாக 6 பேரை இரும்புக்கம்பியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்த ஒரு நபரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். 

இன்று அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை 6 நபர்கள் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

புதிய மசோதாவுக்கு எதிரான மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்!!

இதனையடுத்து தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அந்த நபரை பல்வால் பகுதியில் உள்ள ஆதர்ஷ் நகரில் வைத்து கைது செய்தனர். தொடர் கொலையை அரங்கேற்றியவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், இவர் முன்னாள் ராணுவ வீரர் எனவும் அவரது பெயர் நரேஷ் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள நரேஷ் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த நபர் முதலில் ஆக்ரா மற்றும் மைனர் கேட் பகுதியில் 4 பேரை கடுமையாக தாக்கி படுகொலை செய்ததாக தெரிவித்தார். அடுத்து ஒரு செக்யூரிட்டியை கொலை செய்துள்ளான். அடுத்து பல்வால் மருத்துவமனைக்கு வந்து ஒரு பெண்ணை கொலை செய்துள்ளதாக தெரிவித்தார்.

நாளை டெல்லி மேல் சபையில் ‘முத்தலாக் தடை மசோதா’ தாக்கல்!!

மேலும், கொலை சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கொலையாளி குறித்த தகவல்கள் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Trending News