அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்!!

அந்தமான் தீவுகளில் நள்ளிரவில் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Last Updated : Feb 13, 2019, 10:23 AM IST
அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்!! title=

அந்தமான் தீவுகளில் நள்ளிரவில் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று சென்னைக்கு 609 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்தமான் தீவுகள் பகுதியில் நள்ளிரவு 1.51 மணி அளவில் நில நடுக்கம் உருவாகியுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அந்த பகுதியின் 10கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் ஆழிப்பேரலை தொடர்பாகவும் எதுவும் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. 

Trending News