முதலமைச்சரை சுட்டுக்கொல்ல வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சர்ச்சை பேச்சு

Last Updated : Aug 5, 2017, 12:45 PM IST
முதலமைச்சரை சுட்டுக்கொல்ல வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சர்ச்சை பேச்சு title=

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சர்ச்சை பேச்சு. தலைவர்கள் கண்டனம்.

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு உள்ளார். அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். ஆந்திர மாநிலத்தில் நந்தியால் தொகுதிக்கு வரும் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தற்போது நந்தியால் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நடந்து வருகிறது. 

அப்பொழுது பிரசாரம் செய்த ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது:-  சந்திரபாபு நாயுடுவைப் போன்றவர்கள் தான் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், வாக்காளர்களை ஏமாற்றும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இவரை போன்றவர்களை பொது இடத்தில் வைத்து  சுட்டுக்கொல்ல வேண்டும் என பேசினார்.

ஜெகன் மோகனின் பேச்சுக்கு தெலுங்கு தேசக் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Trending News