எனக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லை... எங்க அப்பாவுக்கு எப்படி வாங்குவேன்: சந்திரசேகர் ராவ்!

எனகு பிறப்புச் சான்றிதழ் இல்லை, எனது தந்தைக்கு நான் எவ்வாறு வாங்க முடியும் என தெலுங்கானா முதல்வர் K.சந்திரசேகர் ராவ் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து கருத்து!!

Last Updated : Mar 8, 2020, 03:54 PM IST
எனக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லை... எங்க அப்பாவுக்கு எப்படி வாங்குவேன்: சந்திரசேகர் ராவ்! title=

எனகு பிறப்புச் சான்றிதழ் இல்லை, எனது தந்தைக்கு நான் எவ்வாறு வாங்க முடியும் என தெலுங்கானா முதல்வர் K.சந்திரசேகர் ராவ் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து கருத்து!!

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (NPR) ஆகியவற்றிற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், தனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

"எனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாத போது, எனது தந்தையின் சான்றிதழை நான் எவ்வாறு தயாரிக்க முடியும்," என்று ஆந்திர மாநில சட்டசபையில் ராவ் கூறினார். "இந்த திட்டம் என்னையும் கவலையடையச் செய்கிறது. நான் கிராமத்தில் எனது வீட்டில் பிறந்தேன். அப்போது மருத்துவமனைகள் எதுவும் இல்லை. கிராமத்து பெரியவர் ஒரு 'ஜன்ம நாமா' எழுதுவார். அது அதிகாரப்பூர்வ முத்திரையை ஏதும் எடுக்கவில்லை" என்று 66 வயதான தெலுங்கானா முதல்வர் கூறினார்.

"நான் பிறந்த போது, எங்களிடம் 580 ஏக்கர் நிலமும் ஒரு கட்டிடமும் இருந்தது. எனது பிறப்புச் சான்றிதழை என்னால் தயாரிக்க முடியாதபோது, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் எவ்வாறு தங்கள் சான்றிதழ்களை பெருவார்கள்" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

முன்பு, பாதிரியார்கள் பெரியவர்களால் குழந்தைகளின் ஜாதகங்களை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டதாக தெலுங்கானா முதல்வர் குறிப்பிட்டார். “அது பிறப்புச் சான்றிதழாக கருதப்படுகிறது. ஆனால், அதில் அதிகாரப்பூர்வ முத்திரை எதுவும் இல்லை. இன்றும் கூட, எனது பிறப்பு நட்சத்திர ஆவணம் என்னிடம் உள்ளது. அது என் மனைவியிடம் உள்ளது. அந்த ஆவணத்தைத் தவிர, எங்களிடம் வேறு எந்த ஆவணங்களும் இல்லை. என்னிடம் இல்லாதபோது, என் தந்தையின் பிறப்புச் சான்றிதழைக் கொண்டு வரும்படி கேட்டால், நான் இறக்க வேண்டுமா? ” என்று KCR கேட்டார்.

தெலுங்கானா முதல்வர் தனது கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி (TRS) சில உறுதியான கடமைகளையும் கொள்கைகளையும் கொண்டுள்ளது என்றும் கட்சி ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும் வலியுறுத்தினார். புதிய சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் இது நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்றும், இது அனைத்து மதங்களையும், சாதி, மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்களையும் சமமாக நடத்துவதாக உறுதியளிப்பதாகவும் CAA-யை அவதூறாகக் கூறினார்.

Trending News