ராட்சசன் பட பாணியில் சிறுமிகளை கொலை செய்த சைகோ கில்லர் கைது.....

மூன்று வயது முதல் ஏழு வயது குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 20 வயதுடைய சைகோ கில்லரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2018, 10:28 AM IST
ராட்சசன் பட பாணியில் சிறுமிகளை கொலை செய்த சைகோ கில்லர் கைது..... title=

மூன்று வயது முதல் ஏழு வயது குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 20 வயதுடைய சைகோ கில்லரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்! 

மூன்று வயது முதல் ஏழு வயது சிறுமிகளை இரக்கமின்றி கற்பழித்து சித்திரவதை செய்து கொலை செய்து வந்த 20 வயதுடைய சுனில் குமார் என்ற சைகோ கொலையாளியை காவல்துறையினர். சமீபகாலமாக, காவல்துறையினர் கொட்டூரமுறையில் கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் சடலம் கிடைத்துள்ளது அந்த சடலம் முழுவதும் கொடூர முறையில் ரத்த காயங்களுடம் பிளாஸ்டிக் பைகளை கொண்டு முகத்தை மூடியபடி சாலங்கள் கிடைத்துள்ளது.

இந்தா சமபவங்கள் குறித்து கலாவ்துரையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரனை நடத்தி வந்ததில் நேற்று 20 வயதுடைய சுனில் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லியை அடுத்த ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 20 வயதேயான பாலியல் குற்றவாளி சுனில் குமார் விசாரணையில் வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சியை அளிக்கின்றன.

குறைந்தது 9 சிறுமிகளை பலாத்காரம் செய்து அவர்களை கொலை செய்ததாக தெரிவித்துள்ள அவன், தம்மிடம் சிக்கியவர்கள் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக முதலில் அவர்களின் கால்களை உடைத்து விடுவதாக கூறியிருக்கிறான். பின்னர் தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டு அவர்களைக் கொலை செய்து விடுவான். காணாமல் போகும் சிறுமிகள் குறித்த புகார்கள் அதிகரிக்கவே போலீசார் தனிப்படைகள் அமைத்து சுனில்குமாரை கைது செய்தனர்.   

 

Trending News