J&K என்கவுண்டர்: பாதுகப்புபடையினரால் 1 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை...

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 1 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்!  

Last Updated : Mar 7, 2019, 10:16 AM IST
J&K என்கவுண்டர்: பாதுகப்புபடையினரால் 1 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை... title=

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 1 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்!  

ஸ்ரீநகர்: ஜம்மு மற்றும் காஷ்மீர் ஹந்த்வாரா கர்ல்கண்ட் பகுதியில் உள்ள பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம்  ஹந்த்வாரா மாவட்டத்தில் உள்ள கர்ல்கண்ட் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, மாநில போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் கோபால்போரா பகுதியை சுற்றி வளைத்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கினர்.

இதனால் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினர். பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 1 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சில தீவிரவாதிகள் அங்கு பதுங்கி இருக்கின்றார்களா என தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார். மேலும், அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கி பொருட்களை கைப்பற்றியுள்ளனர். 

 

Trending News