என்னை பற்றிய அவதூறு எனக்கு வேதனையாக இருக்கிறது: குமாரசாமி எமோஷன்

சமூக ஊடகங்களில் என்னை பற்றி அவதூறு கூறுவதற்காகவா நான் முதல்வரானேன்? என உணர்ச்சி வசப்பட்டு பேசினார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 23, 2019, 06:53 PM IST
என்னை பற்றிய அவதூறு எனக்கு வேதனையாக இருக்கிறது: குமாரசாமி எமோஷன் title=

பெங்களூரு: இந்த அவதூறைகளை பெறவா நான் நீண்ட காலமாக முதல்வராக பணியாற்றினேன்? எனக்கு வேதனை இருக்கிறது. ஆனாலும் நான் வருத்தப்படவில்லை என உணர்ச்சி வசப்பட்டு பேசினார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.

இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று மீண்டும் மீண்டும் கர்நாடக சட்டப்பேரவை தொடங்கியது. குமாரசாமி ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் குமாரசாமி மேலும் இரண்டு நாள் அவகாசம் கோரியதால் சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ அமளியில் ஈடுபட்டனர். 

இதனிடையே தங்களது பதவியை ராஜினாமா செய்த அதிருப்தி MLA-க்கள் 15 பேரும் நாளை காலை காலை 11 மணிக்கு முன்னதாக நேரில் ஆஜராக வேண்டும் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அவர்களுக்கு சம்மன் அனுப்பினார். மேலும் நாளை (ஜூலை 23) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தார்.

இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அப்பொழுது சபாநாயகர் மாலை 4 மணிக்குள் விவாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும், 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அவையில் அறிவித்துள்ளார். 

தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால், கர்நாடக சட்டப்பேரவை அமைத்துள்ள பகுதியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. 

இந்தநிலையில், இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் குமாரசாமி கூறியது, 

சில நேரங்களில் ஏதாவது சிறிது நேரம் கொடுக்கப்பட்டால், அது சிறப்பாகிறது. நான் முன்பு சொன்னது போல், நான் சில தவறுகளைச் செய்திருக்கிறேன், சில நல்ல காரியங்களையும் செய்திருக்கிறேன்.

கடந்த சட்டசபை தேர்தலில் யாருக்கும் முழுமையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதுதான் தற்போதைய சூழ்நிலைக்கு வழிவகுத்தது. ஆனால் கடந்த ஆண்டு ஆட்சி நடத்துவது மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் சரியாக ஆட்சி செய்ய அனுமதிக்கப்படவில்லை.

என்னை திருமணம் செய்வதற்கு முன்பு என் மனைவி, என்னிடம் நான் உங்களை தான் திருமணம் செய்து கொள்கிறேன். உங்கள் அரசியல் அல்லது அதிகாரத்தை அல்ல என்று கூறினார். ஆனால் இன்று என் மனைவி சட்டசபையில் என்னுடன் உள்ளார்.

குறிப்பாக தற்போது நடந்து வரும் விவாதத்தின் முடிவைப் பற்றி நான் கவலைப்படவில்லை. சமூக ஊடகங்களே நமக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. எல்லாம் ட்விட்டரில் உள்ளது. சமூக ஊடகங்களில் பரப்படும் அனைத்து பொய்களை பற்றி பேச நான் விரும்பவில்லை.

சமூக ஊடகங்களில் என்னை பற்றி அவதூறு கூறுவதற்காகவா நான் முதல்வரானேன்? இந்த அவதூறைகளை பெறவா நான் நீண்ட காலமாக முதல்வராக பணியாற்றினேன்? எனக்கு வேதனை இருக்கிறது. நான் வருத்தப்படவில்லை.

இதையெல்லாம் விட நான் மகிழ்ச்சியுடன் எனது பதவியை ராஜினாமா செய்வேன். நான் ஏன் இதையெல்லாம் சொல்கிறேன், ஏனென்றால் இதுபோன்ற அவதூறு ட்வீட்களை நான் பார்க்க விரும்பவில்லை. நான் கண்ணியமாக நடித்துள்ளேன். 

கடந்த 14 மாதங்கள் அனைத்து விதமான பிரச்சனைகளை எல்லாம் தாங்கிக்கொண்டு என்னுடன் பயணித்த கட்சித் தலைவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

Trending News