முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசு தலைவர்!

நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷின் கருணை மனுவை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்!

Last Updated : Jan 17, 2020, 12:22 PM IST
முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசு தலைவர்! title=

12:18 PM 17-Jan-20

நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷின் கருணை மனுவை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்!


உள்துறை அமைச்சகம் (MHA), 2012 கும்பல் குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு அனுப்பி, அதை நிராகரிக்க பரிந்துரைத்துள்ளது. இந்த மனு கோப்பை டெல்லி அரசிடமிருந்து ஜனவரி 16 மதியம் அமைச்சகம் பெற்று மாலை ஜனாதிபதிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

2012-ஆம் ஆண்டு நடந்த பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை நிராகரிக்க ஜனவரி 15-ஆம் தேதி டெல்லி அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ததாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

முகேஷின் கருணை மனுவை முதலில் டெல்லி அரசு நிராகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இது துணை நிலை ஆளுநருக்கு 'நிராகரிப்பு'  செய்யவும் பரிந்துரைத்துள்ளது. டெல்லி அரசாங்கத்தின் பரிந்துரையை துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் ஏற்றுக் கொண்டு கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) அனுப்பினார்.

நிர்பயா கும்பல் கொலை வழக்கு குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனு டெல்லி அரசிடம் இருந்து பெறப்பட்டதா உள்துறை அமைச்சக வட்டாரங்கள் பின்னர் உறுதிப்படுத்தின.

முன்னதாக 'ஜனவரி 22-ம் தேதி குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்' என வெளியான உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைக்க மறுத்துள்ள நிலையில், உயர்நீதிமன்றம், குற்றவாளி முகேஷ் சிங் தனது மரண தண்டனை மீதான கருணை மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் டெல்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவில்., "நான்கு குற்றவாளிகளை தூக்கிலிட்டதற்காக டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் வழங்கிய மரண வாரண்டுகளில் எந்த தவறும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் குற்றவாளிகள் வினய் ஷர்மா (26), முகேஷ் குமார் (32), அக்‌ஷய் குமார் சிங் (31), பவன் குப்தா (25) ஆகிய நான்கு குற்றவாளிகளும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News