Jet Airways நிறுவனத்துக்கு எரிபொருள் சப்ளை நிறுத்தியது இந்தியன் ஆயில்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்களுக்கான பெட்ரோல் வினியோகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுத்தி விட்டது. 

Last Updated : Apr 5, 2019, 05:06 PM IST
Jet Airways நிறுவனத்துக்கு எரிபொருள் சப்ளை நிறுத்தியது இந்தியன் ஆயில் title=

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்களுக்கான பெட்ரோல் வினியோகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுத்தி விட்டது. 

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது. 

இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் நிரப்புவதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முன்னர் அனுப்பிவைத்த பெட்ரோலுக்கு செலுத்த வேண்டிய மிகப்பெரிய தொகையை இந்நிறுவனம் பாக்கி வைத்துள்ளது. பாக்கி தொகை வராததால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு அனுப்பும் பெட்ரோல் சப்ளையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுத்தி விட்டது. 

Trending News