தனது மனைவிக்கு வாட்ஸ் அப் மூலம் தலாக் கூறிய வினோத கணவன்...!

ஹைதரபாத்தை சேர்ந்த ஹூமா சாயிராவுக்கு, ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் வாட்சப் வழியே தலாக் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 19, 2018, 03:41 PM IST
தனது மனைவிக்கு வாட்ஸ் அப் மூலம் தலாக் கூறிய வினோத கணவன்...!  title=

ஹைதரபாத்தை சேர்ந்த ஹூமா சாயிராவுக்கு, ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் வாட்சப் வழியே தலாக் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் 29 வயதுடைய ஹூமா சாயிரா என்பவர் ஓமன் நாட்டைச் சேர்ந்த 72 வயது நபருடன் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்நிலைய்ல், அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் ஹைதராபாத்துக்கு இரண்டு மாதத்துக்கு முன்பு வந்த சாயிரா, தாயுடன் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சாயிராவுக்கு அவரது கணவர் ஓமன் நாட்டில் இருந்து வாட்சப் மூலம் தலாக் அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தால் மனமுடைந்த அவர், தனக்கு உதவி செய்யுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

Trending News