ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டெல்லியில் போராட்டம்!!

Last Updated : Jan 19, 2017, 09:26 AM IST
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டெல்லியில் போராட்டம்!! title=

ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் மட்டுமின்றி டெல்லியிலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம்  நடத்தி வருகிறது. 

கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை நடத்தி தொடர்ந்து வருகின்றனர். போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் பீட்டாவிற்கு எதிராக தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட காரணத்தால், ஜல்லிக்கட்டை இந்த ஆண்டும் நடத்த முடியாமல் போனது. ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தக்கோரியும், தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் தன்னார்வலர்கள் என, பல தரப்பினரும் போராடி வருகின்றனர். 

அலங்காநல்லூரில் தொடங்கிய இந்த போராட்டம் உலகம் முழுவதும் பரவியது. குறிப்பாக இந்த போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெரிய புரட்சியாக தற்போது உருமாறியுள்ளது. 

தமிழக அரசு சார்பில் முதல்வர் பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இதற்காக நேற்று அவர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர். 

Trending News