ஜம்மு-காஷ்மீரில் எண்கவுன்டர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை...

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் வத்ரிகாமில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்!!

Last Updated : Mar 15, 2020, 01:03 PM IST
ஜம்மு-காஷ்மீரில் எண்கவுன்டர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை... title=

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் வத்ரிகாமில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்!!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் உள்பட 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டம், தியால்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் இன்று அதிகாலை  வீடு-வீடாக  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில்  ஒருவன், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கமாண்டர் தாரிக் அகமது என்றும், எஞ்சிய 3 பேரும் லஷ்கர்- இ- தொய்பா அமைப்பு தீவிரவாதிகள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரங்களின்படி, நான்கு பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தான் ஆதரவுடைய ஹிஸ்புல் முஜாஹிதீனுடன் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது, மற்ற மூவரும் லஷ்கர்-இ-தைபா அமைப்புடன் தொடர்புடையவர்கள். பாதுகாப்புப் படையினர் ஒரு பயங்கரவாதிகள் ஒரு மறைவிடத்தில் தங்கியிருந்ததைப் பற்றி ஒரு தகவலைப் பெற்றனர். இதையடுத்து, இந்த துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது.  

Trending News