புத்காம் என்கவுண்டர்: இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை....

ஜம்மு-காஷ்மீரில் இன்று பாதுகாப்புபடையினர் தீவிரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 1, 2018, 09:47 AM IST
புத்காம் என்கவுண்டர்: இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.... title=

ஜம்மு-காஷ்மீரில் இன்று பாதுகாப்புபடையினர் தீவிரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை....

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள ஸாகு அரிசால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்ததால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மேலும் அங்கு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

 

Trending News