Johnson & Johnson கொரோனா தடுப்பூசி இந்தியாவில் எப்போது கிடைக்கும்..!!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் இந்தியாவில் ஒற்றை டோஸ் கோவிட் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்க விண்ணப்பித்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 6, 2021, 04:17 PM IST
  • இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 44,643 புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
  • மொத்த COVID-19 தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 3,18,56,757 ஆக உயர்ந்துள்ளது.
Johnson & Johnson கொரோனா தடுப்பூசி இந்தியாவில் எப்போது கிடைக்கும்..!! title=

புதுடெல்லி: ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) வெள்ளிக்கிழமை இந்தியாவில் அதன் ஒற்றை டோஸ் கோவிட் -19 தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. "ஆகஸ்ட் 5, 2021 அன்று ஜான்சன் & ஜான்சன் பிரைவேட் லிமிடெட் அதன் ஒற்றை டோஸ் கோவிட் -19 தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரி இந்திய அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளது" என்று ஜான்சன் & ஜான்சன் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். ஜான்சன் & ஜான்சன் மற்றும்  பயோலாஜிக்கல் இ லிமிடெட்  இணைந்து ஒற்றை டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை இந்திய மக்களுக்கும், உலகின் பிற பகுதிகளுக்கும்  வழங்க திட்டமிட்டுள்ளது

"பயாலஜிகல் இ (Biological E) எங்கள் உலகளாவிய விநியோகச் நெட்வொர்க்கின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும். இதன் மூலம் ஜான்சன் & ஜான்சன் கோவிட் -19 தடுப்பூசி, அரசுகள் மற்றும்  தடுப்பூசியை சேமித்து விநியோகிக்கும் அமைப்புகளுடன் மேற்கொண்டுள்ள விரிவான ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை மூலம் வழங்கப்படும்"  என அந்த நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறியது.

Also Read | Covid Updates Tamil Nadu: ஆகஸ்ட் 05, இன்றைய கொரோனா பாதிப்பு 1,997; 33 பேர் பலி

இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகள் 85% செயல்திறனைக் காட்டுகின்றன. ஜான்சன் அண்ட் ஜனசன் ஒற்றை-ஷாட் தடுப்பூசி 85 சதவிகிதம் செயல்திறன் மிக்கது என்பதை ஆய்வு  கூறுகிறது
J&J தடுப்பூசி இந்தியாவில் எப்போது கிடைக்கும்?

"தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர எங்கள் கோவிட் -19 தடுப்பூசிக்கும் விரைவில் அவசர காலத்திற்கான அனுமதி வழங்க இந்திய அரசாங்கத்துடன் ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறோம். விரைவில், அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம் ," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திங்களன்று, J&J தனது ஒற்றை டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 44,643 புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதை அடுத்து, மொத்த COVID-19 தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 3,18,56,757 ஆக உயர்ந்துள்ளது.

Also Read | சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 7 மார்க்கெட்கள் ஆகஸ்ட் 9 வரை மூடப்பட்டது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News