பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து எபிசோடாக வெளியிட்ட நபர் கைது..!

பத்துக்கும் மேற்பட்ட இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ பதிவு செய்த ஆண் கைது..!  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 24, 2018, 01:44 PM IST
பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து எபிசோடாக வெளியிட்ட நபர் கைது..!   title=

பத்துக்கும் மேற்பட்ட இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ பதிவு செய்த ஆண் கைது..!  

கேரளாவில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்த 45 வயதுடைய ஆணை காவல்துறையினர் கர்நாடகா மாநிலம் மங்களூரில் செப்டம்பர் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்ததை அடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவர் பெரும்பாலும் சமூக ஆர்வாலர்களை குறிவைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இதை தொடர்ந்து, அந்த நபரை காவல்துறையினர் சமூக தொழிலாளி ஒருவரின் உதவியுடன் கைது செய்துள்ளனர். மேலும் கர்ட்ரி காவல்துறையினர் பர்கே காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

இவர், தனது கூட்டாளி  பெண்மணி ஒருவரின் உதவியுடன் இளம் பெண்களை வியாசநகரவில் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வது, பாலியல் துன்புறுத்தல், அதை  எபிசோடாக படமாக்குவது போன்ற செயல்களை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது போன்றே கேரளா பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களைத் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தியதாக கைது செய்துள்ளனர். 

 

Trending News