முலாயம் மீதான வழக்கை 24 ஆண்டுகளுக்குப் பிறகு வாபஸ் பெற்ற மாயாவதி

உச்சநீதிமன்றத்தில் முலாயம் சிங்கிற்கு (Mulayam Singh) எதிராக BSP தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்பப் பெற்றதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா உறுதிப்படுத்தி உள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 8, 2019, 02:09 PM IST
முலாயம் மீதான வழக்கை 24 ஆண்டுகளுக்குப் பிறகு வாபஸ் பெற்ற மாயாவதி title=

புதுடெல்லி: உத்தரபிரதேச (Uttar Pradesh) அரசியலில் மீண்டும் ஒரு பெரிய அரசியல் திருப்பம் தொடங்கியுள்ளது. 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னர் எஸ்பி-பகுஜன் சமாஜ் கட்சி (SP-BSP Alliance) கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இரண்டு கட்சிகளின் கூட்டணி முறிந்தது. எஸ்பி (Samajwadi Party) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (Bahujan Samaj Party) இடையே ஏற்பட்ட சர்ச்சை வெளிச்சத்துக்கு வந்தன. ஆனால் உச்சநீதிமன்றத்தில் முலாயம் சிங்கிற்கு (Mulayam Singh) எதிராக பி.எஸ்.பி. (BSP) தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்பப் பெறப்போவதாகக் கூறப்படுகிறது. இதை பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா உறுதிப்படுத்தியுள்ளார்.

நமக்கு தகவல்களின்படி, இது பிப்ரவரி 26, 2019 அன்று உச்சநீதிமன்றத்தில் இருந்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது. குற்றவியல் எண் 126/2009 உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் மட்டுமே முலாயம் சிங் மீதான வழக்கை வாபஸ் பெற்றுள்ளார் என்றும், மற்ற வழக்குகள் அப்படியே தான் இருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றும் உத்தரபிரதேச அரசியலில், மாயாவதி தனது கட்சியினருடன் விருந்தினர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது சமாஜ்வாதி கட்சியினர் கொடுரமாக தாக்குதல் நடத்தினர். இந்த நிகழ்வு  உத்தரபிரதேச அரசியலில் மறக்க முடியாத நிகழ்வாகவே உருவெடுத்தது.

இந்த நிகழ்வுக்கு பிறகு, இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் கடுமையாக எதிர்த்து வந்தனர். ஆனால் நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது, இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால் அவர்களின் கூட்டணி நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை. 1993ல், பாப்ரி இடிக்கப்பட்ட பின்னர், சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து பாஜகவை வீழ்த்தி மாநிலத்தில் ஆட்சியில் அமர்ந்தன. ஆனால் இந்த கூட்டணியின் உறவு இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவடைந்தது. 

ஜூன் 2, 1995 அன்று லக்னோவில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடந்த தாக்குதலில் முலாயம் சிங் யாதவ், அவரது சகோதரர் சிவ்பால் சிங் யாதவ், பெனி பிரசாத் வர்மா, அசாம் கான் உள்ளிட்ட பல தலைவர்கள் மீது மாயாவதி சார்பாக ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News