13 வயது சிறுமியை கற்பழித்து தீ வைத்த கும்பல்!

மத்தியபிரதேசத்தில் 13 வயது தலித் சிறுமியை ஆறு பேர் கொண்ட கும்பல் கற்பழித்து, தீ வைத்த எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

Last Updated : Feb 12, 2018, 06:18 PM IST
13 வயது சிறுமியை கற்பழித்து தீ வைத்த கும்பல்! title=

மத்தியபிரதேசத்தில் உள்ள ம்.பி.எஸ் சுஸ்டானியின் கிராமத்தில் 13 வயது நிறைந்த சிறுமியை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவரின் தனிமை நிலை அறிந்த அதே பகுதியை சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கற்பழித்ததுடன்.

அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தீ வைத்த எரித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவம் கடந்த மாதம் மத்தியபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பிய 19வயது மாணவியை நான்கு பேர் கொண்டகும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர். தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

Trending News