POCSO சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது!

குழந்தைகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டதிருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.

Last Updated : Aug 2, 2019, 06:47 AM IST
POCSO சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது! title=

குழந்தைகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டதிருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.

பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 'போக்சோ' என அழைக்கப்படுகிறது. 

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை அதிகபடுத்துவதற்காக இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த மசோதாவை மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "நமது குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களை தூக்கு தண்டனை கிடைக்கும் வகையில், சட்ட திருத்தத்தை கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் சிறார்களை வைத்து ஆபாசபடங்கள் தொடர்பான குற்றங்களை தடுக்கும் வகையில், அந்த வகையான குற்றங்களை செய்பவர்களுக்கும், சிறார் ஆபாச படங்களை வைத்திருப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கும் வகையில், திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது." என குறிப்பிட்டிருந்தார்.

மசோதாவின் விதிகள் குறித்து விரிவாகக் கூறும் பட்சத்தில், பிரிவு 15-ன் கீழ், ஒரு குழந்தை சம்பந்தப்பட்ட ஆபாசப் படத்தை சேமித்து வைத்துள்ளவர்களுக்கு ரூ .5,000 (முதல் சந்தர்ப்பத்தில்) அபராதம் விதிக்கப்படும்.

இரண்டாவது சந்தர்ப்பத்தில், குழந்தை ஆபாசப் படங்களை பகிர / அனுப்பும் நோக்கத்துடன் புகார பெரும் பட்சத்தில் ரூ .10,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் குழந்தைகள் சம்ப்தப்பட்ட ஆபாச படங்களை காட்சிப்படுத்தப்பட்டால், விநியோகிக்கப்படுதல் அல்லது பிரச்சாரம் செய்தல் பேன்ற குற்றங்களுக்கு தண்டனை சிறைவாசம் வரை நீட்டிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இதுபோன்ற ஆபாச படங்களை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினால் 3 வருடங்களுக்கும் குறையாத சிறைத்தண்டனை அல்லது 5 வருடங்கள் வரை நீட்டிக்கப்படலாம் எனவும், அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவையில் நேற்று இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர், “மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவு இருப்பதால், இதை மேலும் ஆய்வு செய்வதற்காக பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். திமுக உறுப்பினர் கனிமொழி, நிலைக்குழுவுக்கோ அல்லது தேடல் குழுவுக்கோ அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பின்னர், குரல் ஓட்டெடுப்பு மூலம், ‘போக்சோ’ திருத்த மசோதா நிறைவேறியது. கட்சி எல்லைகளை கடந்து அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

ஏற்கனவே மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறி விட்டதால், பாராளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலையும் இந்த மசோதா பெற்று விட்டது. 

Trending News