Alert! PM CARES நன்கொடையாளர்களை ஏமாற்ற உருவாக்கபட்ட போலி UPI ID...

பொதுமக்கள் கொரோனா நிவாரண நிதி நன்கொடையாளர்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட போலி UPI ஐடி-யை டெல்லி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்!!

Last Updated : Mar 30, 2020, 09:13 AM IST
Alert! PM CARES நன்கொடையாளர்களை ஏமாற்ற உருவாக்கபட்ட போலி UPI ID...  title=

பொதுமக்கள் கொரோனா நிவாரண நிதி நன்கொடையாளர்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட போலி UPI ஐடி-யை டெல்லி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்!!

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மக்கள் பங்களிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்தார். கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக பிரதமர் குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசரகால சூழல் நிவாரணம் நிதிக்காக பிரதமர் மோடி தொடங்கியுள்ள PM CARES பொது நிவாரண நிதி வங்கி கணக்கு விவரங்களை வெளியிட்டார். இந்த வங்கி எண்ணிற்கு பலரும் தங்களின் நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.  

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுதலை எதிர்த்து புதிதாக தொடங்கப்பட்ட PM CARES நிதியத்தின் நன்கொடையாளர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட போலி யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் - Unified Payments Interface (UPI) ID-யை டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு ஞாயிற்றுக்கிழமை கண்டறிந்துள்ளது. 

DCP (சைபர் கிரைம்) அனீஷ் ராய் ஒரு ட்வீட்டில், ID pmcare@sbi, உடன் போலி UPI உருவாக்கப்பட்டது. இது சரியான ID pmcares@sbi போன்றது. போலி ID குறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கும் விளக்கமளித்துள்ளதோடு, வங்கி அதைத் தடுத்துள்ளது என்று மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என அவர்கள் தெரிவித்தனர். கொடிய கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராட, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் (PM-CARES) நிதியத்தின் அரசியலமைப்பை அறிவித்தார்.

இந்தியாவில் 21 உயிர்களையும், உலகம் முழுவதும் 25,000-க்கும் அதிகமானவர்களையும் கொன்ற கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக பிரதமர் மோடி மக்களை PM-CARES நிதியில் பங்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். 

Trending News