ஜூலை 27 முதல் ஹரியானாவில் பள்ளி-கல்லூரிகளை திறக்கப்படும்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அன்லாக் 2.0 அமல் படுத்தப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் அரியானா ​​மாநில அரசு பல சேவைகளை தளர்த்தத் தொடங்கியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 2, 2020, 07:09 AM IST
ஜூலை 27 முதல் ஹரியானாவில் பள்ளி-கல்லூரிகளை திறக்கப்படும்: வழிகாட்டுதல்கள் வெளியீடு title=

அரியானா: அன்லாக் 2.0 (Unlock 2) காலகட்டத்தில் அரியானாவில் வணிக வளாகங்கள் திறக்கப்பட்ட பின்னர், அரியானா அரசு (Haryana Govt) இப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளது. ஜூலை 27 அன்று மாநிலத்தில் பள்ளி-கல்லூரி மீண்டும் திறப்பதற்கான திட்டம் வரையறுக்கப்பட்டு உள்ளது.

அரியானா பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் (Directorate School Education) வெளியிட்ட அறிக்கையின் படி, அரசு பள்ளியில் கோடை விடுமுறை ஜூலை 1 முதல் ஜூலை 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 26 அன்று விடுமுறை முடிந்த பிறகு, ஜூலை 27 முதல் பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படும். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வி இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி, பள்ளியைத் திறக்க ஏற்பாடுகளை தயார் செய்யுங்கள் எனக் கூறியுள்ளது.

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அன்லாக் 2.0 அமல் படுத்தப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் அரியானா ​​மாநில அரசு பல சேவைகளை தளர்த்தத் தொடங்கியுள்ளது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

பிற செய்தி | நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் மால்கள்!! Aarogya Setu & Mask கட்டாயம்.

மால்கள் திறக்கப்பட்டன, நகர பேருந்து சேவை தொடங்கியது:
குருகிராம் மெட்ரோ சிட்டி பஸ் லிமிடெட் (ஜி.எம்.சி.பி.எல்- GMCBL) நகரில் 6 வழித்தடங்களுக்கான பேருந்து சேவையைத் தொடங்கியுள்ளது.

இது தவிர, குருக்ராம் மற்றும் ஃபரிதாபாத்தில் வணிக வளாகங்களை திறக்க அரியானா நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷாப்பிங் மால் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இரு நகரங்களிலும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

Haryana School

பிற செய்தி | புலம்பெயர்ந்த தொழிலாளர்களை காக்க புதிய திட்டத்துடன் களமிறங்கிய அரியானா

மாலில் உள்ள சினிமா ஹால் மற்றும் கேமிங் பகுதி மூடப்பட்டிருக்கும். உணவகம் மற்றும் உணவு வளாகங்களும் 50% திறன் கொண்டதாக இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளன. மாலுக்கு வரும் ஒவ்வொரு நபரும் சமூக தூரத்தைப் பின்பற்றி முகமூடியைப் பயன்படுத்த வேண்டும். முகமூடி அணியாதவர்கள் ரூ .500 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

Trending News