ராம் ஜென்ம பூமி வழக்கு வாதங்களை முன்வைக்க கடைசி நாள் அக்.,18: SC

அயோத்தி வழக்கில், வாதங்களை முன்வைப்பதற்கான கால அவகாசம், அக்டோபர் 18 ஆம் தேதி வரை மட்டுமே உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!!

Last Updated : Sep 26, 2019, 12:35 PM IST
ராம் ஜென்ம பூமி வழக்கு வாதங்களை முன்வைக்க கடைசி நாள் அக்.,18: SC  title=

அயோத்தி வழக்கில், வாதங்களை முன்வைப்பதற்கான கால அவகாசம், அக்டோபர் 18 ஆம் தேதி வரை மட்டுமே உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!!

டெல்லி: அயோத்தி நில உரிமை வழக்கு தொடர்பான வாதங்களை அக்டோபர்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. அயோத்தி நில உரிமை வழக்கில் 3 தரப்பினரும் தங்கள் வாதங்களை அக்டோபர்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில், பாபர் மசூதி - ராம் ஜென்ம பூமி தொடர்பான 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் சன்னி வக்பு வாரியம், இந்து மகா சபா மற்றும் நிர்மோகி அகாரா அமைப்புகள் நிலத்தை பகிர்ந்து எடுத்துக் கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மத்தியஸ்த முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் வழக்கின் விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. விசாரணையானது இன்று 32ஆவது நாளை எட்டியுள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பான வாதங்களை அக்டோபர் 18ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், இன்றைய விசாரணையின் போது, வழக்கின் வாதங்களை முன் வைப்பதற்கான கால அவசாகம் அக்டோபர் 18 ஆம் தேதிக்குப் பின் ஒருநாள் கூட நீட்டிக்கப்பட மாட்டாது என நீதிபதிகள் கூறினர்.  

 

Trending News